இங்கிலாந்தைப் பிறப்பிடமாகவும், Bristol ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெசி ஜெகசீலன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவு தந்து
நீண்ட தூரம் சென்றதேனோ?
கண்மூடி விழிப்பதற்குள் கனப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா - என்று
நினைக்கும் முன்னே
மறைந்தது ஏனோ?
விழி நீர் துடைக்கவும் உன்
கரங்கள் தான் இல்லையன்றோ
கண்ட பல கனவிலும்
வந்து வந்து போகுதடா..
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும்
உன் நிலவு முகம் தேயாதடா..
உதிர்ந்து நீ போனாலும் உருக்கும்
உன் நினைவுகள் - எம் உள்ளத்தில்
என்றென்றும் உறைந்திருக்கும்
உன் பிரிவினால் வாடும் குடும்பத்தினர்.