யாழ். மீசாலை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Greenford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யசோதரன் சாம்பசிவம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டு ஆனாலும் அப்பா
உங்கள் நினைவு அகலவில்லை ஒருபோதும்
கண்ணிறைந்த உங்கள் தோற்றம்,
உயரிய குணம் எண்ணமெல்லாம்
நிறைந்த தந்தையே
ஏங்குகிறோம் உங்கள் இழப்பால்
அன்பால் எங்கள் அனைவரையும் இணைத்து
அருமை பெருமையாய் எமை வளர்த்து
இன்முகம் காட்டி இல்லத்தை செழிப்பாக்கி
சுமைதாங்கி எமை வளர்த்தீர்
சுடராய் நாம் ஒளிர்ந்தோம்
எமை வளர்த்த எம் அப்பா
என்றென்றைக்கும் எம்முடன் நீர் எம்
ஆயுள்வரை உன்னதமாய் நினைத்திருப்போம்
ஆண்டுகள் பல சென்றாலும்
உன் நினைவுகள் அலைமோதி
கரைமேவுகின்றது
தாண்டு போகுமோ உன் இனிய நினைவுகள்
தாங்கி ஏங்கித் தவிக்கின்றோம்.