யாழ். மல்லாகம் சோடாக் கொம்பனி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Vreden ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ராஜ்குமார் சின்னையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மறக்கமுடியவில்லையோ!!
நாட்கள் பல சென்று
மாதங்கள் பல கழிந்து - இன்று
ஆண்டு ஒன்று முடிந்தாலும்
உங்கள் மறைவு - இன்னும்
எங்கள் நெஞ்சை விட்டு
விலகவில்லையே!
நாம் இன்றும் உங்கள்
நினைவுகளோடு வாழ்கிறோமே!
எங்கு சென்றாலும் உங்கள் சிரிப்பு - எம்
கண்முன்னே தெரிகிறதே......
சிறுவயது முதல் பார்த்த முகம்
நண்பர்களாக இருந்த - அந்த
காதலர்களாக வலம் வந்த
சுகமான காலம்.........
கணவன் மனைவியாக வாழ்ந்த
இனிமையான காலம் ..... இவற்றை
என் இதயத்திலிருந்து
அழிக்கமுடியுமா??? - இல்லை
ஆயிரம் கனவுகளுடன்
வாழ்ந்த உள்ளம்
பாதியில் நிறைவேறாமல்
போனதேனோ..
எம்மைத் தனியாய் தவிக்கவிட்டு
நீங்கள் பிரிந்ததேனோ .....
உங்கள் ஆத்மா சாந்தியடைய நாம் எல்லோரும்
பிரார்த்திக்கின்றோம்.
உங்கள் பிரிவால் வாடும் அன்பு
மனைவி, பிள்ளைகள்