மலேசியா Johor ஐப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை ஊறணியைப் பூர்வீகமாகவும், ஜேர்மனி Bedburg, Gummersbach ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இறப்பியேல் அருள்பிரகாசம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கலையாத உங்கள் முகமும்
கள்ளமில்லா உங்கள் சிரிப்பும்
இனி காண்பது எப்போது?
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உங்கள்
நினைவால் வாடுகிறோம் அப்பா!
தூக்கம் கெடும் போதும்
சொல்கின்றது உங்கள் நினைப்பு
தூங்கி எழும் போதும் கனக்கின்றது
எம் இதயம் வாழ்வு அது நிஜமல்ல
உணர்ந்தோம் உங்கள் பிரிவால்
உங்கள் இழப்பை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா
எம் அன்பு அப்பாவே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!