கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். சுண்டுக்குழியை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டன் Wembley யை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரன் தயேஸ் அவர்கள் 15-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம் மகேஸ்வரன் மற்றும் நவரத்தினம் தம்பதிகளின் ஏக புதல்வரும்,
காரைநகர் களபூமி பொன்னாவளையைச் சேர்ந்த சிவகுருநாதன் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அஸ்வின் அவர்களின் அன்புத் தந்தையும்,
சிவனேஸ்வரி(காரைநகர்), சிவரூபி(இத்தாலி), சிவநந்தன்(காரைநகர்), காலஞ்சென்ற குருபரன் ஆகியோரின் மைத்துனரும்,
நடராசா பாரதி(காரைநகர்), சோமசுந்தரம் செந்தூரன்(இத்தாலி) ஆகியோரின் சகலனும்,
தர்ணிகா, டர்னிகன், கவிநயா ஆகியோரின் சிறிய தந்தையும்,
பிரவின், ரித்திக், அவுஸ்ரின் ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.