யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா மகாறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நவரத்தினம் பிலோமினா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
இம் மண்ணில் எம்மை
மலரவைத்த தாயே!
உமது எண்ணங்கள் எமது கண்ணில்.....
துளியாய் வடிகின்றது!
பாசமும் பரிவும் தந்து
பார்த்துப் பார்த்து வளர்த்தது
பசுமையான நினைவுகளாய் இருக்கிறதே
உங்கள் அன்பின் ஆழம்தான்
இன்றும் எம் விழியோரங்களில்
கண்ணீர்த்துளிகளாய் கசிகின்றது
நீங்கள் எங்களை ஒருபோதும்
விட்டு விடவில்லை நீங்கள் எப்பொழுதும்
எங்களுடன் தான் இருக்கின்றீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவரைப் பிரார்த்திக்கின்றோம்..!
30-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று விண்ணகம் அடைந்த எமது குடும்பத்தலைவி நவரத்தினம் பிலோமினா அவர்களின் 31ம் நாள் நினைவு நாள் 01-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று மகாறம்பைக்குளம் மடுமாதா ஆலயத்தில் மு.ப 07:30 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அவரது இல்லத்தில் ந.ப 12:30 மணியளவில் மதியபோசனம் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து ஆத்மசாந்திக்கு பிராத்திக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியோர் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.