யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட தனிநாயக முதலி வழித்தோன்றல் சின்னையா அருமைரத்னம் அவர்கள் 22-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆறுமுகம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினிதேவி(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
நந்திராஜன், ஹேமச்சந்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நித்யப்பிரியா, அனித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இராஜேஸ்வரி, கமலேஸ்வரி, புஸ்பராணி, சச்சிதானந்தன், மனோரஞ்சிதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராமலிங்கம், தனபாலசிங்கம், மாணிக்கவாசகர், ஜெயதேவி, சண்முகேஸ்வரன், நவமணி, கமலாதேவி(மாம்பழம்), காலஞ்சென்ற கனகலட்சுமி(தோடை), பேரின்பநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வைத்திலிங்கம், காலஞ்சென்ற கணேசு, வில்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஹம்ஷானந்தி, திமோத்தி, அக்ஷரானந்தி, கவிப்பிரியன், மஹிஷானந்தி ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 27-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ந.ப 12:00 மணி முதல் பி.ப 2:00 மணி வரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.