யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், நைஜீரியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலேஸ்வரி செல்வராஜா(BA/MA இளைப்பாறிய ஆசிரியை, விரிவுரையாளர்- புனித கப்ரியல் கான்வென்ட் ஹட்டன், யாழ் இராமநாதன் கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி, யாழ் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை, பலாலி ஆசிரியர் கல்லூரி, கொழும்பு ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம், நைஜீரியா, ஐக்கிய) அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் பார்வையிலிருந்து
நீங்கள் மறைந்து ஓராண்டானதை
நம்ப மறுக்கின்றதம்மா விழிகள்
நீங்கள் இல்லாத இந்த உலகத்தில்
இப்போது நாம் வாழும் ஒவ்வொரு நிமிடமும்
ஒளியற்ற விழிகளோடு வாழ்கிறோம்
உணர்வற்ற உடலோடு
நடமாடும் நடைப்பிணமானோம்
ஒவ்வொரு கணப்பொழுதும்
உயிர் எம்மைப் பிரிவதாய் உணர்கிறோம்
எத்தனை நாளானாலும் உங்கள்
நினைவுகள் எப்படி எம்மை விட்டு நீங்கும்?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!